News Channel

மரம் நடுதல் விழிப்புணர்வு நிகழ்ச்சி

ஊராம்பட்டியில் 
JIH-ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் நாடு தழுவிய அளவில்  CIO - children Islamic organisation சார்பாக  நடைபெறும் பரப்புரையை JIH- இஸ்லாமிக் சென்டர் ஊழியர் வட்டம் சார்பாக  ஊராம்பட்டியில் 
"மண்ணில் கைகள் இந்தியாவில் இதயங்கள்" என்ற தலைப்பில் பரப்புரை நடைப்பெற்றது. 

ஊராம்பட்டியில் பரப்புரை சார்பாக  JIH- உறுப்பினரும் ஊராம்பட்டி பள்ளிவாசல் இமாம் அக்பர் இக்பால் அவர்களின் தலைமையில்  கீழ்க்கண்ட நிகழ்வுகள் நடைபெற்றன.

1. மரங்கள் நடுதல் நிகழ்வுகள் 
2. மரங்கள் நடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து உரை நடை பெற்றன.

மரம் வளர்ப்பதின் நன்மைகள் 

பசுமையான இடங்களும் காடுகளும் பொழுதுபோக்கு, ஓய்வு மற்றும் சமூகக் கூட்டங்களுக்கான பகுதிகளை வழங்குவதன் மூலம் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துகின்றன. இந்த இடங்கள் உடல் மற்றும் மன நல்வாழ்வுக்கு பங்களிக்கின்றன, ஆரோக்கியமான, மிகவும் ஒருங்கிணைந்த சமூகங்களை வளர்க்கின்றன.

வெப்பநிலையை ஒழுங்குபடுத்துதல், இயற்கை பேரழிவுகளின் தீவிரத்தை குறைத்தல் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகளை நிலைப்படுத்துதல் மூலம் காலநிலை மாற்றத்தின் தாக்கங்களைக் குறைப்பதில் மரங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. வலுவான மரப் போர்வையைக் கொண்ட சமூகங்கள் தீவிர வானிலை நிகழ்வுகளைக் கையாளவும், உயிர்கள் மற்றும் வாழ்வாதாரங்களைப் பாதுகாக்கவும் உதவுகின்றன.


இதில் 15 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டார்கள்.