கும்பகோணம், மார்ச் 30, 2025:
இன்று மாலை 5:30 மணியளவில், கும்பகோணம் ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் (மஸ்ஜிதுர் ரஹ்மான், நைல் நகர், குறிஞ்சி நகர் பள்ளிவாசல்) மற்றும் ஜோதிமலை இறைப்பணி திருகூட்டம் இணைந்து சமய நல்லிணக்க இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடத்தியது.
சிறப்பு விருந்தினர்கள்:
- அருட்பணி முனைவர் க. கோஸ்மான் ஆரோக்கியராஜ் (வட்டார முதன்மை குரு)
- திரு. திருவடிக்குடில் சுவாமிகள் (ஜோதிமலை இறைப்பணி திருகூட்டம் நிறுவனர்)
இவர்கள் சமய ஒற்றுமை மற்றும் அன்பான வாழ்வியல் முறைகள் குறித்து உரையாற்றினர்.
சிறப்புரை:
ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் மாவட்ட அமைப்பாளர் ஜனாப் முகமது யூனுஸ் அவர்கள், "மத வேறுபாடுகளை மதித்தல், அன்பான உறவுகள் வளர்த்தல் மற்றும் சமூக நல்லிணக்கம் ஆகியவை இறையருளின் அடையாளங்கள்" என்று குறிப்பிட்டு, ரமலான் மாதத்தின் புனிதத்தை எடுத்துரைத்தார்.
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு:
மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளிவாசல் இமாம் மௌலவி அஹமது கபீர் மன்பையி அவர்கள் நிகழ்ச்சியை நடத்தி வைத்தார்.
பங்கேற்பாளர்கள்:
100க்கும் மேற்பட்ட பல்வேறு சமயத்தைச் சேர்ந்த சகோதரர்கள் மற்றும் சகோதரிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, சமூக ஒற்றுமைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டை நிகழ்த்தினர்.
#சமய_ஒற்றுமை #இப்தார்_விருந்து #கும்பகோணம் #ரமலான்_பொழுது