ஹஜ் பெருநாள் தொழுகை & உரை
இந்த ஆண்டு ஹஜ் பெருநாள் அன்று JIH- இஸ்லாமிக் சென்டர் ஊழியர் வட்டங்கள் சார்பாக
ரமலான் நகர்,
தீன் நகர்,
வன்னி வயல்,
மக்கா நகர்,
முகமதியாபுரம்,
மரவாய்குடி,
மதீனா நகர்,
ஓடைக்குளம்,
கோட்டை யேந்தல்,
குராயூர்,
சொக்கநாதன் பட்டி,
காண்டை,
அணைக்கரைப்பட்டி,
ஊராம் பட்டி ,
கோட்டூர்,
கோடாங்கி பட்டி
என , இராமநாதபுரம் மாவட்டம் ' மதுரை மாவட்டம் ' விருதுநகர் மாவட்டம் ' தேனி மாவட்டம்
என்று அனைத்து மாவட்டங்களிலுள்ள பள்ளிவாசல்கள் தொழுகைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு சிறப்பான முறையில் ஹஜ் பெருநாள் தொழுகை நடந்தேறியது.
தொழுகை முடிந்த பிறகு ஒவ்வொரு ஜமாத்தார்களும் தங்களுடைய அன்புகளை பரிமாறிக் கொண்டனர், இனிப்புகளும் பரிசுகளும் வழங்கிக் கொண்டனர், தொழுகை முடிந்ததோடு குர்பானி தரக்கூடிய அமல்களில் அனைவரையும் ஈடுபட்டு உற்றார்- உறவினர்களுக்கும் மாற்று மத சகோதரர்களுக்கும் தங்களுடைய குர்பான் இறைச்சியை பங்கிட்டு மகிழ்ந்து கொண்டார்கள்.
சில ஊர்களில் பெருநாள் என்று மாலை விளையாட்டு போட்டிகளும் பரிசுகளும் வழங்கப்பட்டு, வெகு சிறப்பாக இந்த ஆண்டு ஹஜ் பெருநாள் நிகழ்வு நடந்தேறின.