News Channel

பத்திரிகை அறிக்கை.

28 அக்டோபர் 2025

பத்திரிகை அறிக்கை.

புது தில்லி: ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் (JIH) அகில இந்திய துணைத் தலைவர் மாலிக் முஹ்தசிம் கான்
இந்தியத் தேர்தல் ஆணையம் (இ.தே.ஆ.) அறிவித்துள்ள 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நாடு தழுவிய Special Intensive Revision(SIR)
சிறப்பு தீவிர திருத்தம் குறித்து ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளார். 

சமீபத்தில் முடிவடைந்த பீகாரின் SIR அனுபவத்திலிருந்து பாடம் கற்றுக்கொண்டு, 
இ.தே.ஆ. இந்த செயல்முறையில் வெளிப்படைத்தன்மை, நியாயம் மற்றும் உன்மைத் தன்மையை உறுதி செய்ய வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

இதன்மூலம் பெருமளவிலான வாக்காளர் பெயர் நீக்கங்கள் மீண்டும் நிகழ்வதைத் தடுக்க வேண்டும் என்றார்.

 ஊடகங்களுக்கு வெளியிட்ட அறிக்கையில் மலிக் முஹ்தசிம் கான் அவர்கள் 
“பீகாரின் SIR செயல்முறை 
தீவிர ஒழுங்கீனங்கள், 
யதார்த்தமற்ற காலக்கெடுகள், மற்றும் அபாயகரமான வெளிப்படைத் தன்மை
இல்லாமை, 
வரைவு பட்டியல்களிலிருந்து ஆரம்பத்தில் சுமார் 65 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டன,
இது முன் எப்போதும் இல்லாத அளவும்
மேலும் திருத்தங்களுக்குப் பிறகும் 47 லட்சம் வாக்காளர்கள் விலக்கப்பட்டுள்ளனர். 

இந்த நடைமுறை சான்றளிக்கும் பொறுப்பை அரசிடம் இருந்து குடிமக்களிடம் திணித்தது.
இது நிர்வாக ரீதியிலான திருத்தத்தை குடியுரிமை சரிபார்ப்பு இயக்கமாக மாற்றியது. இந்த செயல்முறையை நாடு தழுவிய அளவில் விரிவுபடுத்துவதற்கு முன், இ.தே.ஆ. ஜனநாயகத்தின் முக்கியத்துவத்தின் பார்வையிலிருந்து  முக்கிய கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும்.

மேலும் பல முக்கிய கேள்விகளை கேட்டுள்ளார்:
 இ.தே.ஆ. செயல்முறைக்கு முன் பதிலளிக்க வேண்டும் என்றார். 

பீகார் அனுபவத்திலிருந்து என்ன பாடங்கள் கற்றுக்கொள்ளப்பட்டன, 
SIR வழிகாட்டுதல்களில் என்ன குறிப்பிட்ட மாற்றங்கள் செய்யப்பட்டன என்பதை அவர் கேட்டார். 

SIR  இன் இரண்டாம் கட்டத்திற்கு இ.தே.ஆ. நிர்ணயித்த காலக்கெடு குறித்தும் கேள்வி எழுப்பினார்; 

இவ்வளவு விரிவான செயல்முறையை வெறும் ஒரு மாதத்தில் நடத்துவது பல சிக்கல்களை உருவாக்கும் என்று வலியுறுத்தினார். 
இந்த முக்கியமான செயல்முறைக்கு இ.தே.ஆ. போதுமான நேரத்தை ஏன் வழங்கவில்லை என்றும் கேட்டார்.

 2002/2003ஐ இறுதி
ஆண்டாகத் தொடர்ந்து பயன்படுத்துவது ஏன்?
அப்போது எந்த குடியுரிமை சரிபார்ப்பும் நடத்தப்படவில்லை என்றும், “சட்டவிரோத வெளிநாட்டவர்களை” அடையாளம் காண்பது இன்னும் SIR இன் நோக்கமாக உள்ளதா என்றும் கேட்டார். 

உச்சநீதிமன்றத்தின் தெளிவான உத்தரவுகளுக்கு மாறாக ஆதாரை குடியுரிமை சான்றாக ஏற்க மறுப்பது ஏன்?
அதேநேரம் பிற குடியுரிமை அல்லாத ஆவணங்கள் ஏற்கப்படுகின்றன என்றும்,
2002/2003 பட்டியல்களில் இடம்பெற்றவர்களுக்கு விலக்கு யாருக்கு தனிநபருக்கு, அவரது குழந்தைகளுக்கு அல்லது விரிவான குடும்ப உறுப்பினர்களுக்கா என்பதை தெளிவுபடுத்துமாறு கோரினார்.

திருத்தப்பட்ட, 
வீடு வீடாக சரிபார்ப்பு செயல்முறை குறித்து சந்தேகம் எழுப்பிய அவர், 
வரைவு நிலையில் புதிய வாக்காளர்களைச் சேர்ப்பதற்கு இது இப்போது அனுமதிக்கிறதா என்றும், 
சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து படிவங்களுக்கும் உறுதிப்பத்திரங்களை (அறிவிப்பு ரசீது) இ.தே.ஆ. எவ்வாறு உறுதி செய்யும் என்றும் கேட்டார். 

அதிகாரிகள் அல்லது பூத் லெவல் அதிகாரிகள் அனுமதியின்றி படிவங்களை நிரப்புவதாக வரும் அறிக்கைகளை சுட்டிக்காட்டிய அவர், 
இத்தகைய போலி செயல்களைத் தடுக்க என்ன பாதுகாப்பு நடவடிக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்றும் கேட்டார். 

இடம்பெயர்ந்த தொழிலாளர்கள், அவர்கள் வாழ்நிலை மற்றும் ஆவணமின்மை காரணமாக அடிக்கடி விலக்கப்படுவது மற்றொரு தீவிர கவலை என்று சுட்டிக்காட்டினார்.

வெளிப்படைத் தன்மை குறித்தும் ,
பீகாரின் SIR இல் பெண்களின் பிரதிநிதித்துவம் குறைந்ததை குறிப்பிட்ட மலிக் முஹ்தசிம் கான் அவர்கள் 
இதுபோன்ற விளைவைத் தடுக்க என்ன திருத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கேட்டார். 

பட்டியல்களிலிருந்து விலக்கப்பட்டவர்களுக்கு நீக்கத்திற்கு முன் உரிய அறிவிப்பும் விசாரணையும் வழங்கப்படுமா, 
அல்லது அவர்கள் “புதிய வாக்காளர்களாக” மீண்டும் விண்ணப்பிக்க வேண்டிய கட்டாயமா என்றும் கேட்டார். 

மேலும், பான் அட்டை, ஓட்டுநர் உரிமம், மன்ரேகா வேலை அட்டை, ரேஷன் அட்டை, 
வங்கி பாஸ்புக் போன்ற பொதுவான அடையாள ஆவணங்கள் பிற இ.தே.ஆ. செயல்முறைகளில் தவறாமல் ஏற்கப்படுபவை
ஆனால் அவை ஏன் அங்கீகரிக்கப்பட்ட பட்டியலிலிருந்து தவிர்க்கப்பட்டுள்ளன என்பதை தெளிவுபடுத்துமாறு கோரினார்.

இறுதியாக, தொழில்நுட்ப வெளிப்படைத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து 
மலிக் முஹ்தசிம் கான் வலியுறுத்தியுள்ளார்.
இ.தே.ஆ. பயனுள்ள நகல் நீக்க அமைப்பை ஒருங்கிணைத்துள்ளதா, 
பொது ஆய்வுக்கு இயந்திர வாசிப்பு ஏற்ற வரைவு மற்றும் இறுதி வாக்காளர் பட்டியல்களை வெளியிடுமா என்று கேட்டார். 
இத்தகைய நடவடிக்கைகள் வாக்காளர் நம்பிக்கையை நிலைநாட்டவும், கையாளுதல் அல்லது தவறுகளைத் தடுக்கவும் அவசியம் என்றார்.

மலிக் முஹ்தசிம் பல கான் மேலும் கூறியதாவது:  
“வாக்காளர் பட்டியல் திருத்தங்கள் குடியுரிமை சரிபார்ப்பு இயக்கங்களைப் போல் இருக்கக் கூடாது. 
வாக்களிக்கும் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும், அலுவல்ரீதியான நடைமுறைகளால் தடுக்கப்படக் கூடாது.”

இந்தப் பிரச்சினைகளை இ.தே.ஆ. பகிரங்கமாக தெளிவுபடுத்த வேண்டும், ஆவணத் தடைகள் அல்லது நிர்வாக ஒளிவுமறைவு காரணமாக எந்தக் குடிமகனும் வாக்குரிமை இழக்கப்படாமல் உறுதி செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். “சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்கள் உள்ளடக்கத்தன்மையையும் நம்பிக்கையையும் கோருகின்றன. 
இ.தே.ஆ. வெளிப்படையாக செயல்பட வேண்டும், அரசியலமைப்பு கொள்கைகளை நிலைநாட்ட வேண்டும், ஒவ்வொரு இந்தியரின் வாக்களிக்கும் உரிமையையும் பாதுகாக்க வேண்டும் என்று 
தனது அறிக்கையில் குறிப்பிட்டார்.

வெளியிட்டவர்:  
சல்மான் அஹ்மத்  
தேசிய செயலர், 
ஊடகத் துறை, ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த், 
புது தில்லி