News Channel

ஆழ்ந்த இரங்கல்

ஜெய்சால்மர்-ஜோத்பூர் நெடுஞ்சாலையில் ஏற்பட்ட கொடூரமான பேருந்து தீ விபத்தில் 20 பயணிகள் உயிரிழந்ததையும், 16 பேர் கடுமையான தீக்காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதையும் அறிந்து நாங்கள் ஆழ்ந்த கவலையடைகின்றோம்.
இந்த விபத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு எங்கள் உள்ளார்ந்த இரங்கலையும் பிரார்த்தனைகளையும் தெரிவித்துக்கொள்கிறோம். 
இந்தப் பெரும் சோகத்தில் துன்புறும் அனைவரின் துயரத்தையும் நாங்கள் பகிர்ந்துகொள்கிறோம். 
விபத்தில் காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைந்து நலம் பெற வேண்டுமென பிரார்த்திக்கிறோம்.
இந்த நெருக்கடியான நேரத்தில் உடனடியாக மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொண்ட உள்ளூர் நிர்வாகத்தையும், 
உதவிக்கு வந்த மக்களையும் நாங்கள் பாராட்டுகிறோம்.
இந்த சோக விபத்தின் காரணத்தை முழுமையாக விசாரணை செய்து,
 எதிர்காலத்தில் இத்தகைய சம்பவங்கள் நிகழாமல் தடுப்பதற்கான தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அரசை நாங்கள் வலியுறுத்துகிறோம்.

பேராசிரியர் சலீம் இஞ்சினியர்
அகில இந்தியத் துணைத் தலைவர், 
ஜமாஅத்-இ-இஸ்லாமி ஹிந்த்