News Channel

பத்திரிக்கை அறிக்கை

27 மே 2024

 பத்திரிக்கை செய்தி

ரஃபா முகாமில் இடம்பெயர்ந்த பாலஸ்தீனியர்களை இஸ்ரேல் காட்டுமிராண்டித்தனமாக படுகொலை செய்ததற்கு சையத் சஆதத்துல்லாஹ் ஹுசைனி கடும் கண்டனம்

புதுடெல்லி: ரஃபாவில் உள்ள முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த இடம்பெயர்ந்த பாலஸ்தீனியர்களை இஸ்ரேல் படுகொலை செய்ததற்கு ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த்(JIH)
தலைவர் சையத் சஆதாதுல்லாஹ் ஹுசைனி கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு அவர் அளித்த அறிக்கையில், "தெற்கு காசாவில் உள்ள ரஃபா நகரின் வடமேற்கே உள்ள முகாமில் இடம்பெயர்ந்த பாலஸ்தீனியர்களை இஸ்ரேல் மனிதாபிமானமற்ற முறையில் படுகொலை செய்ததை நாங்கள் கண்டிக்கிறோம். ஊடக செய்திகளின் படி, இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் பாதுகாப்பு பகுதியாக அறிவிக்கப்பட்ட தற்காலிக அகதிகள் கூடாரங்கள் மீது ஏவுகணைகள் மற்றும் குண்டுகள் வீசி தாக்குதலை நடத்தியது.  இத்தாக்குதலில் உயிருடன் மக்கள் எரித்து கொள்ளப்பட்டுள்ளனர். ரஃபாவில் வசிக்கும் உள்நாட்டில் இடம்பெயர்ந்த குடிமக்கள் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் காசா மக்கள் மீது இஸ்ரேல் நடத்தும் தொடர் போர்க்குற்றங்களுக்கு ஒரு உதாரணம்.” என ஜமாஅத் தலைவர் கூறியுள்ளார்.

மேலும் JIH தலைவர் கூறுகையில், "சர்வதேச சட்டம் அல்லது ‘ஜெனோசைட் கன்வென்ஷன்’ போன்ற சர்வதேச ஒப்பந்தங்களை இஸ்ரேல் மதிக்கவில்லை என்பது முதல் நாளிலேயே தெளிவாகிறது. குடியேற்ற காலனித்துவம், இனவெறி மற்றும் பெண்கள், குழந்தைகள் உட்பட அப்பாவி பொதுமக்களை வேண்டுமென்றே கொன்று குவிப்பதை நம்பி நடைமுறைப்படுத்தும் ஒரு அராஜக அரசு. நமது காலத்தில் நடக்கும் மறக்க முடியாத வரலாற்றுத் துயரம். நீதி, ஜனநாயகம், சுதந்திரம் மற்றும் விடுதலையின் முன்னணிப் பாதுகாவலன் என்று கூறிக்கொண்டாலும், உலகிலுள்ள சக்தி வாய்ந்த நாடுகள் போரையும் இனப்படுகொலையையும் தடுக்க முடியாமல் போனது வெட்கக்கேடானது. படுகொலையை நிறுத்துவதற்கும், போர்நிறுத்தத்தை அமல்படுத்துவதற்கும், சுதந்திர பாலஸ்தீன அரசை விரைவாக நிறுவுவதற்கும் விரைவான மற்றும் உறுதியான நடவடிக்கை எடுக்க ஐ.நா. மற்றும் சர்வதேச சமூகத்திற்கு வலுவான கோரிக்கையை மீண்டும் நாங்கள் வலியுறுத்துகிறோம். பாலஸ்தீன மக்களின் நண்பராக வரலாற்றுப் பாத்திரத்தை வகிக்கவும், அதன் பொறுப்புகளை நிறைவேற்ற சர்வதேச சமூகத்தை ஈர்க்கவும், அதன் நல்ல அம்சங்களை பயன்படுத்த இந்திய அரசிற்கு கோரிக்கை வைக்கிறோம்." 

சர்வதேச நீதிமன்றத்தின் (ஐசிஜே)  இந்தியப் பிரதிநிதி நீதிபதி தல்வீர் பண்டாரி ரஃபாவில் இஸ்ரேல் தனது ராணுவ நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்ற தீர்ப்புக்கு ஆதரவாக வாக்களித்தது இந்தியாவுக்குப் பெருமை சேர்ப்பதாகும்.

வெளியீடு:
சல்மான் அஹ்மத் 
தேசிய உதவிச் செயலாளர், ஊடகத் துறை,
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த், 
புதுடெல்லி