Drug-Free Tamil Nadu Awareness Outreach Conducted in Thuvarankurichi
As part of the ‘Drug-Free Tamil Nadu’ campaign, Jamaat-e-Islami Hin....
“சஹாரன்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்திருந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மசூதி இடிக்கப்பட்டதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். இது அரசியல் துதிபாடுதலின் வெட்கக்கேடான, மன்னிக்க முடியாத செயலாகும். சஹாரன்பூர் அதிகாரிகள் இதன் மூலம் தங்களது பாரபட்சமான, மதவெறி மனநிலையை உலகுக்கு அம்பலப்படுத்தியதைத் தவிர வேறு எதையும் சாதித்துவிடவில்லை.இந்த ஒட்டுமொத்த சம்பவமும் இந்திய ஜனநாயகத்தின் மீதான கறையாகும். நாட்டின் நிர்வாகத்தின் மீதும், சிறுபான்மையினரின் உரிமைகள் கையாளப்படும் விதம் குறித்தும் இது பெரும் நிழலை ஏற்படுத்தியுள்ளது.அரசியலமைப்புச் சட்டப் பாதுகாப்புகளைச் சீர்குலைத்து, சட்டத்தின் ஆட்சியை ஆட்சியாளர்களின் விருப்பத்திற்கேற்ப குறைக்கும் பெரும்பான்மைவாத அரசியலின் மிக மோசமான உதாரணங்களில் ஒன்றாக சஹாரன்பூர் மசூதி இடிப்பு வரலாற்றில் பதியப்படும்.”
“பல தசாப்தங்களாகப் பயன்பாட்டில் இருந்த ஒரு வழிபாட்டுத் தலத்தின் நிலையை அதிகாரத்தில் இருப்பவர்களின் விருப்பத்திற்கேற்ப முடிவு செய்ய முடியும் என்றால், சட்டத்தின் ஆட்சியின் மீதான நம்பிக்கை முற்றிலும் தகர்ந்துவிடும்.
வக்ஃப், பட்டா, உடைமை போன்ற சட்டப்பூர்வ விவகாரங்கள் புல்டோசர்கள் மூலம் தீர்க்கப்பட்டால், நீதித்துறையே பயனற்றதாகிவிடும். இந்த விவகாரத்தில் உயர் நீதிமன்றமோ அல்லது உச்ச நீதிமன்றமோ தாமாக முன்வந்து (Suo Motu) தலையிட வேண்டாமா?
அரசியலமைப்பு ஜனநாயகத்தின் அடித்தளத்தை அசைக்கும் இத்தகைய நடவடிக்கைகளுக்கு எதிராக அனைத்து ஜனநாயகவாதிகளும் குரல் எழுப்ப வேண்டும்.”
“நிர்வாகத்தின் சட்டவிரோத நடவடிக்கைகளால் முஸ்லிம்களின் மார்க்கம், அடையாளம், கலாச்சாரம் மற்றும் பாரம்பரியங்களுடனான பிணைப்பை பலவீனப்படுத்திவிட முடியாது. ஒரு வழிபாட்டுத் தலத்தை இடிப்பது சட்டப்பூர்வத் தகராறைத் தீர்ப்பதற்கான வழியாகாது.தன்னிச்சையான அதிகாரப் பிரயோகத்தை விடுத்து, நீதியும் சட்டத்தின் ஆட்சியும் மட்டுமே நிலைநிறுத்தப்பட வேண்டும்.”
As part of the ‘Drug-Free Tamil Nadu’ campaign, Jamaat-e-Islami Hin....
மங்கலம் மது போதைக்கு எதிரான விழிப்புணர்வு பரப்புரை இயக்கம் தெருமுனை....
போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மாரத்தானில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந....
கிருஷ்ணகிரி அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற ....