News Channel

மரக்கன்று நடுதல்

சொக்க நாதன் பட்டி 
JIH-ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் 
CIO - children Islamic organisation சார்பாக நாடு தழுவிய அளவில் 
"மண்ணில் கைகள் இந்தியாவில் இதயங்கள்" 
என்ற தலைப்பில் பரப்புரை நடத்தப்பட்டு வருகின்றது. 

சொக்க நாதன் பட்டியில்  
சார்பாக கடந்த 25.7.2025 வெள்ளிக்கிழமை அன்று நாடு தழுவிய அளவில் மண்ணில் கைகள் இந்தியாவில் இதயங்கள் என்ற பரப்புரையின் ஒரு பகுதியாக மதுரை பகுதியில் உள்ள சொக்க நாதன் பட்டியில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் ஊழியரும் சொக்க நாதன் பட்டி பள்ளிவாசல் இமாம் அப்துர் ரஹ்மான் அவர்கள் தலைமையில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

சொக்கநாதன் பட்டியில் உள்ள அரசு பள்ளிக்கூடத்திற்கு சென்று தலைமை ஆசிரியரை சந்தித்து நடைபெறக்கூடிய பரப்புரையை பற்றி அறிமுகப்படுத்தப்பட்டது. 
அவர்களின் தலைமையில் பள்ளிக்கூடங்களில் மரம் நடுவிழா நிகழ்வு நடைபெற்றன. 
மாணவ மாணவிகள் பெரிதலும் ஆர்வமாக கலந்து கொண்டு மரங்களை நட்டார்கள். 

நடைபெற்ற நிகழ்வு;
--------------------------------------
1.மரக்கன்று நடுதல்
2.சிற்றுரை..
ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

பசுமையான இடங்களும் காடுகளும் பொழுதுபோக்கு, ஓய்வு மற்றும் சமூகக் கூட்டங்களுக்கான பகுதிகளை வழங்குவதன் மூலம் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துகின்றன. இந்த இடங்கள் உடல் மற்றும் மன நல்வாழ்வுக்கு பங்களிக்கின்றன, ஆரோக்கியமான, சமூகங்களை வளர்க்கின்றன.
 வெப்பநிலையை ஒழுங்குபடுத்துதல், இயற்கை பேரழிவுகளின் தீவிரத்தை குறைத்தல் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகளை நிலைப்படுத்துதல் மூலம் காலநிலை மாற்றத்தின் தாக்கங்களைக் குறைப்பதில் மரங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
மரங்கள் குளிர்ச்சியைத் தவிர, தண்ணீரைச் சேமிக்கவும் உதவுகின்றன.

இந்த நிகழ்வில் மொத்தம் பெண்கள் மாணவ , மாணவிகள் என 20 நபர்கள் கலந்து கொண்டார்கள்.