News Channel

ஆபரேஷன் சிந்தூர் குறித்து அமீரே ஜமாஅத் கருத்து

ஆபரேஷன் சிந்தூர் குறித்து அமீரே ஜமாஅத் கருத்து

பயங்கரவாதத்தை ஒரு கடுமையான பிரச்னையாக, ஒட்டுமொத்த மனித குலத்துக்கே எதிரான கொடுங் குற்றமாகவே ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் பார்க்கின்றது. 
நாடும் நாட்டு மக்களும் அமைதியும் நிம்மதியும் பெறுவதற்கு அந்தப் பயங்கரவாதத்தை முற்றாக அழித்தொழிப்பது இன்றியமையாதது என்றே ஜமாஅத் கருதுகின்றது. 

பயங்கரவாதத்தின் மீது வெற்றிகரமான தாக்குதலைத் தொடுத்துள்ள நம்முடைய நாட்டின் இராணுவத்தின் நடவடிக்கைகளை 
சாதி, மத, இன, மொழி பாகுபாடின்றி ஒட்டுமொத்த தேசமே ஆதரிக்கின்றது. 
இந்த நெருக்கடியான நேரத்தில் நாடே இராணுவத்துக்குப் பக்கபலமாக நிற்கின்றது. 

இந்த நெருக்கடியான நேரத்தில் நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு இந்தச் சவாலை எதிர்கொள்வது அவசியம் என்பதையே 
நாம் இந்தத் தருணத்திலும் அதிகமாக வலியுறுத்துகின்றோம். 
தேசப் பாதுகாப்பு போன்ற உணர்வுபூர்வமான விவகாரத்தை எந்த வகையான பிளவுகளையோ, 
வகுப்புவாதப் பதற்றத்தையோ ஏற்படுத்துவதற்காகப் பயன்படுத்திக் கொள்வது 
எந்த விதத்திலும் நாட்டு நலனுக்கு உகந்ததல்ல. 
நம்முடைய நாட்டின் அமைதியையும் பாதுகாப்பையும் பரஸ்பர சகோதரத்துவ பந்தத்தையும் மத,
சமூக நல்லிணத்தையும் எப்பாடுபட்டாவது தக்க வைத்துக் கொள்வதில் கவனம் செலுத்துமாறும் ஒற்றுமையையும் இணக்கத்தையும் 
வெளிப்படுத்தும் படியும் நாம் நம்முடைய நாட்டின் எல்லாத் தரப்பு மக்களுக்கும் சமூகக் குழுகளுக்கும் அரசியல் அமைப்புகளுக்கும் சமூக, ஆன்மிக மன்றங்களுக்கும் அழைப்பு விடுக்கின்றோம். 

- சையத் சஆதத்துல்லாஹ் ஹுசைனி
அகில இந்தியத் தலைவர் 
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த்