"பத்திரிக்கை செய்தி"
“சுவாமி யதி நரசிங் பேசிய அவதூறான கருத்துக்கள் கண்டிக்கத்தக்கது; அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும்”: ஜமாத்தே-இஸ்லாமி ஹிந்த் துணைத் தலைவர்
புது தில்லி,
அக்டோபர் 05:
முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு எதிராக சுவாமி யதி நரசிங் ஆனந்த் கூறிய அவதூறான கருத்துக்களுக்கு ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் துணைத் தலைவர் மாலிக் மோத்சிம் கான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
JIH துணைத் தலைவர்
வெளியிட்ட செய்தியில்,
“சுவாமி யதி நரசிங் ஆனந்த் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு எதிராக கூறிய மிகவும் அவதூறான கருத்துக்கள் மில்லியன் கணக்கான இஸ்லாமியர்களை காயப்படுத்தியது மட்டுமின்றி,
இது மிகவும் வேதனையானது மற்றும் வேண்டுமென்றே செய்யப்பட்டது.
வகுப்புவாதப் பிரிவினர் இது போன்ற பதற்றத்தைத் தூண்டும் நோக்கில் நடத்தப்படும் வன்முறை பேச்சை சகித்துக் கொள்ள முடியாது. அரசும் நீதித்துறையும்
இதற்க்காக உறுதியான நடவடிக்கை எடுத்து மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் நபர்களை தடுக்க வேண்டும்.
மோத்சிம்கான் மேலும் கூறினார், "சுவாமி ஆனந்தின் கருத்துக்கள் ஆழமான தார்மீக மற்றும் ஆன்மீக நெருக்கடியான வருத்தத்தை பிரதிபலிப்பது மட்டுமல்ல அவமதிக்கத்தக்கது. இது இஸ்லாம் மற்றும் அதை பின்பற்றுபவர்களை தாக்குவதில் உள்ள பகுத்தறிவற்ற இனவெறியை அம்பலப்படுத்துகிறது.
இது முஸ்லிம்களின் பிரச்சினை மட்டுமல்ல மாறாக இது போன்ற அவதூறான கருத்துக்கள் கவனிக்கப்பட வேண்டும். இல்லையெனில் சமூகத்தில் தார்மீக மற்றும் ஆன்மீக விழுமியங்கள் வீழ்ச்சியடையும்.
இதுபோன்ற வெறுப்பு அறிக்கைகள் இந்து மதத்தின் மதிப்புகள் மற்றும் போதனைகளுக்கு எதிரானது என்று நம்பப்பட தகுந்தது.,
மேலும் இந்த எதிர் கருத்துகள் இந்து மத அறிவுஜீவிகள் மற்றும் ஆளுமைகளின் பொறுப்பேயாகும்.
மத வெறுப்பு மற்றும் மதத்தை தவறாக பயன்படுத்துபவர்களுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும்.
இவ்வாறு ஜமாஅத் துணைத் தலைவர் மோக்சிம் கான் வலியுறுத்துகிறார்.
முஸ்லிம்கள் அனைவரும் ஆழமாக நினைவில் வைத்து கொள்ள வேண்டும். ஏனெனில் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் கண்ணியத்தையும்,
மரியாதையையும் சில அறியாமை மற்றும் இழிவான மனிதர்களிடம் வரும் வெறுப்பு வார்த்தைகளை குறைக்க முடியாது. இதுபோன்ற தூண்டுதல்களுக்கும் நாம் எதிர்வினையாற்றக்
கூடாது. அமைதினை கைக்கொண்டு இந்த ஆத்திரமூட்டல்களை புத்திசாலித்தனமாக, கையாள பொறுமையாக மிகுந்த கண்ணியத்துடன் எதிர்த்துப் போராட வேண்டும். இத்தகைய முயற்சிகள் மூலம் மட்டுமே பரஸ்பர மரியாதை மற்றும் நல்லிணக்கத்தின் அடிப்படையில் ஒரு சமூகத்தை உருவாக்க முடியும் என்று கூறினார்.
வழங்கியவர்:
சல்மான் அஹ்மத்
தேசிய உதவிச் செயலாளர், ஊடகத் துறை,
ஜமாத்தே-இஸ்லாமி ஹிந்த், தலைமையகம்
புது தில்லி-