பள்ளிக்கூடத்தில் கலந்துரையாடல்
கடந்த 15/7/2024 திங்கட்கிழமை அன்று காமராஜர் பிறந்த தினத்தன்று மதுரை மாவட்டம் குராயூர் பகுதியில் டி.இ.எல்.சி துவக்கப்பள்ளியில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
டி.இ.எல்.சி துவக்கப்பள்ளியில்15/7/2024 திங்கட்கிழமை அன்றைய தினத்தில் தற்போது நடைமுறை உள்ள முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தில் குழந்தைகளுக்கு உணவு வழங்கும் நிகழ்வில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மேலும், அழைப்பின்பேரில்
1. குராயூர் இமாம் அப்துல் கரீம் இன்ஆமீ.
2. பஞ்ஜாயத்தலைவர்.
வீரபுத்திரன்.
3. மகளிர்குழுஅதிகாரி
4. Pm
5. p.t.o.
6. ஆசிரியர்கள் மற்றும்
7. கல்வித்துறை அதிகாரிகளும் வருகை புரிந்தார்கள் குராயூர் முஸ்லிம் ஜமாத் ஜும்மா பள்ளிவாசலின் இமாம் அவர்களை சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கப்பட்டிருந்தனர்.
அந்நிகழ்ச்சிக்கு சென்ற இமாம் அவர்கள் பள்ளி குழந்தைகள் இடத்தில்
* காமராஜரை குறித்தும்,
* நல்லொழுக்கங்ளை குறித்தும்,
* நீதி போதனைகளை வழங்கினார்கள்
மேலும் வருகை புரிந்த கல்வித்துறை அதிகாரியிடத்தில் கலந்துரையாடலும் நடைபெற்றது.