27 ஜூன் 2024
"பத்திரிக்கை செய்தி"
மக்கள் தொடர்பான அடிப்படைப் பிரச்சினைகளில் அரசு தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்று
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் (JIH) மத்திய ஆலோசனைக் குழு வலியுறுத்தியுள்ளது.
புதுடெல்லி:
2024 ஜூன் 23 முதல் 25 வரை ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மத்திய ஆலோசனைக் குழு கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் சமீபத்தில் முடிவடைந்த 2024 மக்களவைத் தேர்தல் குறித்து பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது:
2024 நாடாளுமன்றத் தேர்தலில் மக்களால் வழங்கப்பட்ட தீர்ப்பானது, சர்வாதிகாரத்திற்கு எதிராக ஜனநாயகத்திற்கும், அடிப்படைவாதம் மற்றும் மதவெறிக்கு எதிராக அரசியலமைப்பு கோட்பாடுகளுக்கும், வெறுப்புக்கும் பிரிவினைக்கும் எதிராக தாராளமயத்திற்கும், வளர்ச்சிக்கும், மற்றும் ஆணவத்தின் மீது உள்ளடக்கிய தன்மைக்கு ஆதரவாக இருப்பதாக ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் மத்திய ஆலோசனைக் குழு கருதுகிறது.
பொதுமக்கள் மீண்டும் ஆளும் கட்சிக்கு அதிகாரத்தை வழங்கவில்லை,
மாறாக, வலுவான எதிர்க்கட்சியின் மற்றும் NDA கூட்டணி அரசிற்கு வாக்களித்துள்ளனர் என்று JIH மத்திய ஆலோசனைக் குழு கருதுகிறது.
அரசுப் பொறுப்பில் உள்ளவர்கள் மக்களின் இத்தீர்ப்பை நன்கு புரிந்து கொண்டு அதற்கேற்ப தங்களது கொள்கைகளில் தகுந்த சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்.
பிஜேபி தனது சித்தாந்தக் கொள்கைகளால் நாட்டின் வடக்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் இழப்புகளைச் சந்தித்தாலும், தெற்கில் அது தனது பிடியை வலுப்படுத்தியிருப்பதை JIH மத்திய ஆலோசனைக் குழுவும் உணர்ந்துள்ளது.
தென் மாநில மக்களின் பொறுப்பு அதிகரித்துள்ளது.
நாட்டின் மற்ற பகுதிகளில் கடுமையான சேதத்தை ஏற்படுத்திய மதவெறி மற்றும் வெறுப்பு விஷத்தை தங்கள் மாநிலங்களில் பரப்ப விடக்கூடாது.
இந்தியாவின் ஒரு பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தில், கடந்த பல ஆண்டுகளாக, மத வெறியின் அடிப்படையில் முஸ்லிம்களுக்கு எதிராக கொடுங்கோன்மை மற்றும் வன்முறை சூழல் உருவாக்கப்பட்டு, மசூதி மற்றும் கோவில் என்ற பெயரில் இரு வகுப்பினரிடையே பிளவு விதைகள் விதைக்கப்படுகின்றன. சட்டத்தின் ஆட்சிக்கு பதிலாக, கொடுங்கோன்மை மற்றும் ஒடுக்குமுறை, வெறித்தனம் மற்றும் தவறான சட்ட பயன்பாடு ஆகியவற்றின் பொதுவான சூழல் உருவாக்கப்பட்டது.
மாநில மக்கள், தங்கள் வாக்குகள் மூலம், அந்த தீய போக்கின் மீதான தங்கள் எதிர்ப்பையும் அதிருப்தியையும் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளனர்.
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் மத்திய ஆலோசனைக் குழுவும் எதிர்க்கட்சிகள் இந்த முடிவுகளையும், அவற்றின் தீர்ப்பையும் புரிந்துகொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறது. மதச்சார்பற்ற கட்சிகள் தங்கள் கட்சி நலன்களுக்கும், தனிப்பட்ட பெருமைக்கும் மேலாக உயர்ந்து, கூட்டணி வடிவத்தை ஏற்காமல் இருந்திருந்தால், இந்த வெற்றியை ஒருபோதும் பெற்றிருக்க முடியாது. மதவாதம், வகுப்புவாதம் மற்றும் வெறுப்பு மற்றும் பிரிவினை அரசியலுக்கு எதிராக தெளிவான மற்றும் தைரியமான நிலைப்பாட்டை எடுத்தபோது எதிர்க்கட்சி மீது பொதுமக்களின் நம்பிக்கை வளர்ந்தது என்பதும் உண்மை.
மதவெறிக்கு எதிராக தெளிவான நிலைப்பாட்டை கொண்டு வந்த மாநிலங்களில் வெற்றி பெற்ற அவர்கள், எங்கெல்லாம் தயக்கம், பயம், அழுத்தம், பேராசை, சுயநலம் போன்றவற்றுக்கு இரையானார்களோ, அங்கெல்லாம் இம்முறையும் தோல்வியை சந்திக்க வேண்டியிருந்தது.
நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்டவும், அமைதி மற்றும் நல்லிணக்கத்தைப் பேணவும், அமைதியை நிலைநாட்டவும், அமைதியுடனும், விவேகத்துடனும், புத்திசாலித்தனத்துடனும் தொடர்ச்சியான மற்றும் ஒருங்கிணைந்த முயற்சியை மேற்கொண்ட சமீபத்திய தேர்தல்களில் குடிமை சமூகத்தின் அசாதாரண முயற்சிகளை JIH மத்திய ஆலோசனைக் குழு மிகுந்த மரியாதையுடன் மதிக்கிறது.
கொடுங்கோல் கொள்கைகள் மற்றும் பொது விழிப்புணர்வை எழுப்பியது. இதேபோல், தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த குடிமக்களும் மக்கள் எதிர்கொள்ளும் அடிப்படைப் பிரச்சனைகளைக் கருத்தில் கொண்டும், அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்பதற்காகவும் வாக்களித்தது சாதகமான பலனைத் தந்துள்ளது.
தேர்தல்களின் போது, ஒட்டுமொத்த முஸ்லிம்களும் மிகுந்த ஞானம், புத்திசாலித்தனம், நம்பிக்கையான நுண்ணறிவு, பொறுமை மற்றும் சகிப்புத்தன்மை ஆகியவற்றை வெளிப்படுத்தியதாக ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் மத்திய ஆலோசனைக் குழு உணர்கிறது.
தேர்தலின் போது அவர்களின் உணர்வுகளை தவறாக வழிநடத்தவும், துன்புறுத்தவும், புறக்கணிக்கவும் திட்டமிட்ட மற்றும் தொடர்ச்சியான முயற்சிகள் நடந்தன,
ஆனால் அவர்கள் இந்த வலையில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொண்டு மிகவும் பணிவாகவும் எந்த அச்சமும் இல்லாமல் தங்கள் வாக்குகளைப் பயன்படுத்தினர்.
இதற்காக முஸ்லிம் சமூகத்திற்கு மரியாதை செலுத்துகிறது மற்றும் நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் இந்த புத்திசாலித்தனமான அணுகுமுறையை தொடருமாறு அவர்களுக்கு JIH மத்திய ஆலோசனைக் குழு வேண்டுகோள் விடுக்கிறது.
இதேபோல், முஸ்லிம்களின் மார்க்க மற்றும் சமூக அமைப்புகள், அறிஞர்கள், இளைஞர்கள் மற்றும் பிற தனிநபர்களின் ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் வெற்றிகரமான முயற்சிகளை ஆலோசனைக் குழுப் பாராட்டுகிறது.
மேலும் அவர்களின் நலனுக்காக பிரார்த்தனை செய்கிறது.
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் உறுப்பினர்கள், அதன் நீண்டகால கொள்கைகள் மற்றும் மரபுகள் மூலம், சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் நீதி கிடைத்திடவும், அமைதி மற்றும் பாதுகாப்பை நிலைநாட்டுவதற்கும், மற்றும் தீமைகளை ஒழிப்பதற்கும் தொடர்ச்சியான மற்றும் கூட்டு முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். எங்கள் ஆதரவாளர்களின் முயற்சிகளை நாங்கள் மனதார பாராட்டுகிறோம். அவர்கள் இறைவனிடம் பெரும் வெகுமதிப் பெற பிரார்த்தனை செய்கிறோம். மேலும் இந்த முயற்சிகளைத் தொடருமாறு அவர்களிடம் வேண்டுகோள் விடுக்கிறோம்.
மத்திய அரசும், எதிர்க்கட்சிகளும் மக்களின் இந்த தீர்ப்பை மதித்து, மக்களின் அடிப்படைக் கேள்விகள் மற்றும் பிரச்சினைகளில் தீவிர கவனம் செலுத்தி, ஜனநாயக விழுமியங்களையும் மரபுகளையும் மனதில் கொள்ள வேண்டும் என்று ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் மத்திய ஆலோசனைக் குழு கோருகிறது.
நாட்டின் அனைத்து குடிமக்களின் அடிப்படை உரிமைகளையும் சமமாக மதிப்பதுடன், நாட்டில் மதவாத மற்றும் வர்க்க மோதல்கள் ஏற்படுவதற்கு இடமளிக்காமல் இருப்பது அரசின் பொறுப்பு என்பதை ஆலோசனைக் குழு அவர்களுக்கு நினைவூட்டுகிறது.
எந்தவொரு கட்சியும் அல்லது கூட்டணியும் ஆட்சிக்கு வந்தால், அது மக்களின் நம்பிக்கையாக அந்தப் பொறுப்பை நிலைநிறுத்த வேண்டும். மேலும் அவர்களுக்கு வாக்களித்தவர்கள் மற்றும் அவரை எதிர்த்தவர்கள் உட்பட அனைவருக்கும் பொறுப்பு ஏற்க வேண்டும். எனவே, அரசு குடிமக்களிடையே எந்தவித பாகுபாடும், பாரபட்சமும் காட்டக்கூடாது.
இந்த நேரத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ள மதச்சார்பற்ற அரசியல் கட்சிகளின் பொறுப்பு பன்மடங்கு அதிகரித்துள்ளது என்பதை JIH மத்திய ஆலோசனைக் குழு வலியுறுத்துகிறது. அவர்கள் அரசை ஆதரிக்கும்போது, ஜனநாயகக் கோட்பாடுகள் மற்றும் நடைமுறைகளை அரசு கண்டிப்பாக கடைப்பிடிப்பதையும், ஜனநாயக அமைப்புகளின் சுயாட்சி மற்றும் மக்களின் ஜனநாயக உரிமைகள் மற்றும் சுதந்திரங்களில் தலையிடுவதைத் தவிர்ப்பதையும், சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரின் பிரச்சனைகளையும் தீவிரமாக எடுத்துக் கொள்வதையும் உறுதி செய்வது அவர்களின் தார்மீகப் பொறுப்பு.
கொடூம் முதலாளித்துவம் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட குறுங்குழுவாதத்தின் கொள்கைகளை நிராகரிக்கும் அதே வேளையில், வளங்களின் நியாயமான விநியோகத்தையும், சமூகத்தின் நலிவடைந்த மற்றும் பின்தங்கிய பிரிவினருக்கு அதிகாரமளிப்பதையும் உறுதிசெய்யும் கொள்கைகள் ஊக்குவிக்கப்பட வேண்டும். சிறுபான்மையினரின், குறிப்பாக முஸ்லிம்களின் உரிமைகளுக்கு முழு மரியாதை அளிப்பதன் மூலம், அவர்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க முடியும்.
வெளியீடு:
சல்மான் அஹ்மத்
தேசிய உதவிச் செயலாளர் ஊடகத் துறை.
ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் தலைமையகம்
புது தில்லி.