"பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி"
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த், பாலக்கரை வட்டம் மற்றும் திருச்சி மாவட்ட பைத்துல்மால் அறக்கட்டளை சார்பில் பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி 23.06.2024 அன்று முதலியார் சத்திரம் KMS ஹக்கீம் ஹாலில் நடைப்பெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த், திருச்சி கிளைத் தலைவர் முனைவர். ஹஜ் மொய்தீன் தலைமை தாங்கினார்.
மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது பெற்ற சுற்றுசூழல் ஆர்வலர் முனைவர் . மாராச்சி சுப்புராமன் புனித வளனார் கல்லூரி மேல்நிலைப் பள்ளி தாளாளர் அருட்திரு. மா. ஆ. இஞ்ஞாசி சே.ச, மற்றும் திருச்சி மாவட்ட பைத்துல்மால் அறக்கட்டளை தலைவர் டாக்டர். ச.சாகுல் ஹமீது ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
மணிப்பால் பல்கலைக்கழக இணைப் பேராசிரியர் முனைவர் அ. அப்துல் அஜீஸ் சிறப்புரை நிகழ்த்தினார். அவர் பேசுகையில், தியாகம்தான் மனிதனுக்கு அமைதியையும், மகிழ்ச்சியையும் தரும். வரலாற்று சாதனையாளர்களின் தியாகத்தால்தான் மனிதனுக்கு பல நவீன கண்டுபிடிப்புகள் கிடைத்தன. இப்ராஹீம் (அலை) அவர்களின் தியாகத்தையும் அர்ப்பணிப்பையும் நினைவு கூறும் வகையில் ஹஜ் பெருநாள் கொண்டாடப்படுகிறது. நபி இப்ராஹீம் (அலை) பொறுமையாளராக திகழ்ந்தார். சமத்துவத்தை போதித்தார் என கூறினார்.
முன்னதாக, ஜனாப். காதர் மீரா திருக்குர்ஆன் வசனங்களை ஓதி நிகழ்ச்சியை துவங்கிவைத்தார். ஜமாஅத் உறுப்பினர் முனைவர். அப்துல் ரஜாக் அனைவரையும் வரவேற்று, நிகழ்ச்சியின் நோக்கம் குறித்து அறிமுகம் செய்தார்கள். சகோ. சலாவுதீன் நிகழ்வை தொகுத்து வழங்கினார்.
ஹஜ் பெருநாளை முன்னிட்டு நடைபெற்ற இந்நிகழ்வில் அனைத்து சமயங்களைச் சார்ந்த 150-க்கும் மேற்ப்பட்டோர் கலந்து கொண்டனர். அனைவருக்கும் நூல்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.
புகழனைத்தும் இறைவனுக்கே!