News Channel

இராமநாதபுரம் மதினா நகரில் மரம் நடுதல் நிகழ்ச்சி

இராமநாதபுரம் - சிக்கல் மதினாநகர் 
JIH-ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் CIO - children Islamic organisation சார்பாக நாடு தழுவிய அளவில் 
"மண்ணில் கைகள் இந்தியாவில் இதயங்கள்" 
என்ற தலைப்பில் பரப்புரை நடத்தப்பட்டது. 

பரப்புரையில் ஓர் பகுதியாக JIH-ஜமாஅத் தே இஸ்லாமி ஹிந்த், இஸ்லாமிக் சென்டர் ஊழியர் வட்டம்  சார்பாக  மதினா நகர் ஜும்ஆ பள்ளிவாசல் இமாமும் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் உறுப்பினர் ஆலிம் முஹம்மது ரபீக் அவர்கள் தலைமையில் 
சிக்கல் மதினா நகரில் 23.07.2025 புதன்கிழமை அன்று "மண்ணில் கைகள் இந்தியாவில் இதயங்களின்" என்ற தலைப்பில் குழந்தைகளுக்கான சிறப்பு நிகழ்வுகள் நடைப்பெற்றன.

நடைபெற்ற நிகழ்வு 

1.மரகன்று நடுதல்
2.சிறுஉரை
3.ஓவியம்வரைதல்
4.கவிதை
போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

நாடு தழுவிய அளவில் நடைபெறும் பரப்புரையின் மையமாக உள்ள மரம் நடுதல் நிகழ்வின் மூலமாக
மாணவர்களின் உரை நிகழ்ந்தன.

பசுமையான இடங்களும் காடுகளும் பொழுதுபோக்கு, ஓய்வு மற்றும் சமூகக் கூட்டங்களுக்கான பகுதிகளை வழங்குவதன் மூலம் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துகின்றன. இந்த இடங்கள் உடல் மற்றும் மன நல்வாழ்வுக்கு பங்களிக்கின்றன, ஆரோக்கியமான, சமூகங்களை வளர்க்கின்றன.
 வெப்பநிலையை ஒழுங்குபடுத்துதல், இயற்கை பேரழிவுகளின் தீவிரத்தை குறைத்தல் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகளை நிலைப்படுத்துதல் மூலம் காலநிலை மாற்றத்தின் தாக்கங்களைக் குறைப்பதில் மரங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
மரங்கள் குளிர்ச்சியைத் தவிர, தண்ணீரைச் சேமிக்கவும் உதவுகின்றன.

இயற்கையின் செலிப்பே மனிதனின் செழிப்பு 
இயற்கையை நாமோ அழிக்கிறோம் .அழிவது இயற்கை மட்டுமல்ல 
நம் வாழ்க்கையும் தான் ! இனியாவது திருந்துவோம்! மனிதவளம் காக்க இயற்கை வளம் பேணுவோம்! 
நிறைய மரக்கன்றுகளை நடுவோம்!நெகிழியை முற்றிலுமாக தவிர்ப்போம்! 
நீர் நிலைகளில் கழிவுகளை கொட்டாமல் இருப்போம்!
 இயற்கை வளம் காப்போம் !
இன்பமாய் வாழ்ந்திடுவோம்!


இதில் 28 மாணவ , மாணவிகள் கலந்து கொண்டார்கள்.