News Channel

ஹஜ் வழிகாட்டுதல் முகாம் - 2025

ஹஜ் வழிகாட்டுதல் முகாம் - 2025

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த், கோவை பெருநகரத்தின் சார்பாக இந்த வருடம் ஹஜ் புனித யாத்திரை செல்பவர்களுக்கான
ஹஜ் வழிகாட்டுதல் முகாம் இன்று (08 மே 2025) காலை 9.30 மணி முதல் NSK  மண்டபத்தில் வைத்து நடைபெற்றது.

இந்நிகழ்வில் தொடக்கமாக ஜமாஅத் கோவை பெருநகரத் தலைவர் ஜனாப். P.S. உமர் ஃபாரூக் அவர்கள் தலைமையுரையாற்றினார். 

"கடந்த 12 ஆண்டுகளாக ஜமாஅத் கோவை சார்பாக ஹஜ் வழிகாட்டுதல் முகாம் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. 
இந்த முகாமின் முக்கியமான நோக்கம் அல்லாஹ்வின் திருப்தியை நாடி ஹஜ் செய்ய செல்ல உங்களுக்கு சரியான வழிகாட்டுதல் வழங்க வேண்டும் என்பதும், 
ஜமாஅத்தின் இஸ்லாமிய, சமூகப் பணிகளுக்கு உங்களுடைய பிரார்த்தனையும் வேண்டிதான்" என்று தனது தலைமையுரையில் தெரிவித்தார்கள். 

அதனைத் தொடர்ந்து ஜமாஅத் தமிழ்நாடு மாநிலத் தலைவர் மௌலவி. முஹம்மது ஹனீஃபா மன்பஈ அவர்கள் "ஹஜ்ஜின் உயிரோட்டம்" என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள். 

தொடர்ந்து அகண்ட திரையில் - PPT Presentation மூலமாக வீடியோ வடிவிலும் முழுமையான ஹஜ் புனித யாத்திரை குறித்தான விளக்கத்துடன் கூடிய வகுப்பினை மௌலவி. முஹம்மது இஸ்மாயில் இம்தாதி சாஹிப் அவர்கள் நடத்தினார்கள். 

ஹஜ் புனித யாத்திரையின் வரலாற்று சம்பவங்களை நினைவூட்டிய போது ஹாஜி பெருமக்கள் கண்ணீரோடு தியாக வரலாறுகளை நினைவுகூர்ந்தனர். 

மாலை 5 மணி வரை நடைபெற்ற வழிகாட்டுதல் நிகழ்வில் அனைத்து ஹாஜிகளும் முழுமையாக பங்குபெற்று தங்களுடைய சந்தேகங்களையும் நிவர்த்தி செய்யும் வண்ணம் கலந்துரையாடி முழுமையாக பங்கு பெற்றனர். 

நிகழ்வில் 300 க்கும் மேற்பட்ட ஹாஜிகள் கலந்து கொண்டனர்.