"அஸ்ஸபீலுல் ஹுதா (السبيل الهدى)" I வழிகாட்டும் பாதை - ஆன்லைன் இஸ்லாமிய வாராந்திர வகுப்புகள்.
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த், கோவை பெருநகரத்தின் சார்பாக ஒவ்வொரு வாரமும் இஸ்லாமிய அறிவின் ஒளியினை உங்கள் உள்ளத்தில் பரப்பிட ஒரு அழைக்கின்ற ஒலியாக ஆன்லைனில் இஸ்லாமிய வாராந்திர வகுப்புகள் "அஸ்ஸபீலுல் ஹுதா (السبيل الهدى) – வழிகாட்டும் பாதை” என்ற தலைப்பில் நடைபெற இருக்கிறது.
அதனுடைய இலட்சினையை இன்று (மே 8 2025) NSK மண்டபத்தில் வைத்து ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தமிழ்நாடு மாநிலத் தலைவர் மௌலவி. முஹம்மது ஹனீஃபா மன்பஈ அவர்கள் வெளியிட, ஜமாஅத்தின் மாநில அமைப்புச் செயலாளர் ஜனாப். K. ஜலாலுதீன் சாஹிப் அவர்கள் பெற்றுக்கொண்டார்கள்.
உடன் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த், கோவை பெருநகரத் தலைவர் ஜனாப். P.S. உமர் பாரூக் சாஹிப் அவர்களும், மனித மேம்பாட்டுத் துறைச் செயலாளர் மௌலவி. முஹம்மது இஸ்மாயில் இம்தாதி அவர்களும் உடனிருந்தனர்.
ஆன்லைன் இஸ்லாமிய வாராந்திர வகுப்புகளில் தொடர் இஸ்லாமிய உரைகள், கேள்வி பதில் நிகழ்வுகள், வரலாற்று உரைகள் போன்றவை ஒவ்வொரு வாரமும் நடைபெற இருக்கிறது. இன்ஷா அல்லாஹ்.
"அஸ்ஸபீலுல் ஹுதா (السبيل الهدى) – வழிகாட்டும் பாதை” யின் முதல் வகுப்பு வருகின்ற மே 16 2025 – வெள்ளிக்கிழமை இரவு 9.00 மணி முதல் 9.45 மணி வரை நடைபெற இருக்கிறது.
இவ்வகுப்புகளில் தங்களையும் இணைத்துக்கொள்ள விரும்புகிறவர்கள் https://chat.whatsapp.com/FBZIh36CXiL6mJaGRjbFAF என்ற லிங்கினை பயன்படுத்தி ஆன்லைன் வாராந்திர வகுப்பின் வாட்ஸ்அப் குழுவில் இணைந்திடுங்கள்.