News Channel

உயர்கல்விக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி

உயர் கல்விக்கான வழிகாட்டுதல் மற்றும் வேலை வாய்ப்புக்கான சிறப்பு நிகழ்ச்சி இராமநாதபுரம் ரமலான் நகரில் நடைபெற்றது.

கடந்த சில ஆண்டுகளாக மதுரை இஸ்லாமிக் சென்டர் கீழே இயங்கக்கூடிய கிராமங்களில் மாணவ மாணவிகளுக்கு உயர் கல்விக்கான விழிப்புணர்வும் படித்து முடித்து இருக்கக்கூடிய இளைஞர்கள் இளைஞிகளுக்கான வேலை வாய்ப்புக்கான வழிகாட்டுதலும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. 
இந்த 2024-ம் ஆண்டு ரமலான் நகரில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் (jih) சார்பாகவும் மற்றும் ரமலான் நகர் முஸ்லிம் ஜமாத் சார்பாகவும் மதுரை இஸ்லாமிக் சென்டருடைய வழிகாட்டுதலின் அடிப்படையில் உயர்கல்விக்கான வழிகாட்டுதலும் வேலை வாய்ப்புக்கான வழிகாட்டுதலுமான சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்த முடிவு செய்யப்பட்டது. அவ்வகையில் கடந்த 28/ 4 /2024 ஞாயிற்றுக்கிழமை மாலை 6:00 மணி முதல் இரவு 9 மணி வரை இச் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றன. 

இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் (jih) மாநில செயலாளர் மௌலவி முஹைதீன் குட்டி உமரி அவர்களும், மதுரை இஸ்லாமிக் சென்டர் துணை செயலாளர் ஜனாப் : நஜீர் ஹுசைன் அவர்களின் முன்னிலையில். ரமலான் நகர் ஜமாத் தலைவரின் தலைமையின் கீழ் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இந்நிகழ்ச்சிக்கு மாணவ மாணவிகளுக்கு வழிகாட்டக்கூடிய விருந்தினர்களாக 
பேராசிரியர் A. சையது உசேன் அவர்களும் ( மாநில ஊடகத்துறை செயளாலர், 
All India Ideal Teachers Association 
Tamil Nadu .) 

மற்றும், ராமநாதபுரம் பழனிவலசை உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் V. முருகன் அவர்களும் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு சிறப்பான வழிகாட்டுதல்களை வழங்கினார்கள். இந்நிகழ்ச்சிக்கு முத்தாய்ப்பாக ராமநாதபுரம் கேணிக்கரை காவல் நிலையத்தின் இன்ஸ்பெக்டராக பணி செய்யக்கூடிய ஆறுமுகம் அவர்கள் கலந்து கொண்டு தன்னார்வமாக மாணவ மாணவிகளுக்கு அறிவுரை கூறுவதாக அனுமதி வாங்கி மாணவ மாணவிகளை சிறப்பாக அறிவுரை வழங்கினார்கள். 

மாணவ மாணவிகளுக்கு உயர் கல்விக்கான வழிகாட்ட வருகை புரிந்த பேராசிரியர்கள் சிறப்பான முறையில் வழிகாட்டுதல்களை கொடுத்தனர். 
அதில் குறிப்பாக, பேராசிரியர் சையது உசேன் அவர்கள், வருகை புரிந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு ஒவ்வொரு துறையாக மருத்துவம், பொறியியல் என ஒவ்வொரு துறையாக மாணவ மாணவிகள் உயர்கல்வியை படிப்பதற்கு 

📍தங்களை எப்படி தயார் படுத்திக் கொள்ள வேண்டும். 
📍தங்களுடைய எதிர்காலத்தை எப்படி திட்டம் தீட்டிக்கொள்ள வேண்டும். 
📍அதை அடைவதற்கு எப்படி முயற்சி செய்ய வேண்டும். 
📍மாணவ மாணவிகளுக்கு எதிராக இருக்கக்கூடிய உயர் கல்வியை நாம் எப்படி தரம் பார்ப்பது 
📍அதை அடைவதற்கான வழிகள் என்ன 

போன்ற செய்திகளையும் ஒவ்வொரு துறைக்கும் ஏற்ப்படுத்தி வைத்திருக்க கூடிய வழிமுறைகளை தெளிவாக எடுத்துரைத்தார்கள். இந்நிகழ்ச்சிக்கு மாணவ மாணவிகளுடைய பெற்றோர்களும் வருகை புரிந்ததனால் மிகவும் பயனுள்ளதாக அமைந்ததா தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். 

அதேபோல அதற்கு அடுத்து உரையாற்றிய உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாணவர்கள் தங்களுடைய இலக்கை அடைய வேண்டும் என்றால் தங்களுடைய படிப்பிலே மிக கவனம் வேண்டும் ஒவ்வொரு நிலையையும் ஊன்றி படித்து அறிந்து கொள்ள வேண்டும். அவ்வழியில் படிக்க வேண்டும். அப்படி அவர்கள் தங்களுடைய கல்விமுறையை அமைத்துக் கொண்டால்தான் போட்டி உலகில் நாம் வெற்றி அடைய முடியும் என்று ஊக்கப்படுத்த கூடிய வகையில் பல நிகழ்வுகளை அவர்களுடைய அனுபவங்களை மாணவ மாணவிகளுக்கு மிக சிறப்பாக வழிகாட்டுதலை வழங்கினார்கள். 

இறுதியாக வருகை புரிந்த சிறப்பு விருந்தினர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது இந்நிகழ்ச்சி மாணவ மாணவிகளுக்கு மட்டுமல்லாமல் அவர்களுடைய பெற்றோர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாகவும் ஊக்கமளிக்க கூடியதாகவும் அமைந்ததாக தங்களுடைய கருத்துக்களை கூறி மகிழ்வோடு விடை பெற்று சென்றனர்.