ஈகை பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி
*ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கிருஷ்ணகிரி கிளை சார்பாக 29.03.2026 ஞாயிற்றுக்கிழமை காலை 11.00 மணிக்கு விநாயகா மஹாலில் சிறப்பாக நடைபெற்றது.
நகர தலைவர் சகோதரர் சிபகத்துல்லாஹ் தலைமை தாங்கினார்.
முதலில் இறைவசனம் மௌலவி இஸ்மாயில் ஃபலாஹி ஓதினார். .
தமிழாக்கத்தை சகோதரர் சுஹைல் வாசித்தார்
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் புதுச்சேரி மண்டல அமைப்பாளர் சகோதரர் அப்துல் ஹமீத் நோக்க உரையாற்றினார்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் கிருஷ்ணகிரி மாவட்ட தலைவர். ஓம் சாந்தி K. சங்கர் வாழ்த்துரை வழங்கினார்
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் திரு நாராயணமூர்த்தி வாழ்த்துரையாற்றினார்.
கவிஞர் மற்றும் எழுத்தாளர் முனைவர் ஓசூர் மணிமேகலை அவர்கள், நபிகள் நாயகம் போதித்த பெண்ணியம், குடும்ப வாழ்க்கை, சமூகப் பொறுப்புகள் பற்றிய கருத்துகளை தொகுத்து சிறப்புரையாற்றினார்கள்
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் தமிழ்நாடு மாநில செயலாளர் திரு S.N சிக்கந்தர் அவர்கள் ரமலான் என்பது ஒரு மாத பயிற்சியின் மூலம் மனித இனம் தொடர்ந்து நல்லொழுக்க விழுமங்களை வருடம் முழுமையும் பயன்படுத்தி மற்றவர்க்கு பயனளிக்கும் வாழ்வு என்று ஈகைப் பெருநாள் பற்றி சிறப்புரையாற்றினார்கள்.
சிறப்பு அழைப்பாளர்களுக்கு அண்ணலாரின் ஆளுமைகள் புத்தகம் வழங்கப்பட்டது.
இறுதியாக ஜமாஅத் தே இஸ்லாமி ஹிந்தின் கிருஷ்ணகிரி நகர செயலாளர் திரு முஹம்மது மாஸ் அவர்கள் நன்றியுரை ஆற்றினார்கள்.
இந்நிகழ்ச்சியை சகோதரர் இப்ராஹிம் அவர்கள் சிறப்பாக வழி நடத்தினார்கள்
எல்லா புகழும் இறைவனுக்கே