27 மார்ச் 2026
"பத்திரிக்கை அறிக்கை"
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த்
அகில இந்தியத் தலைவர்
சையத் சஆதத்துல்லாஹ் ஹுசைனி அவர்களின் தவறாக வழிநடத்தும் வைரல் வீடியோ குறித்த விளக்கம்.
புது தில்லி:
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தலைவர் சையத் சஆதத்துல்லாஹ் ஹுசைனி அவர்களின் சமீபத்திய வைரல் வீடியோ கிளிப் தொடர்பாக,
குறிப்பாக கேரளாவின் சில பகுதிகளில் எழுந்துள்ள தவறான புரிதல்கள் மற்றும் ஆட்சேபனைகள் குறித்த விளக்கம் பின்வருமாறு:
சையத் சஆதத்துல்லாஹ் ஹுசைனி அவர்களின் வீடியோ கிளிப் ஒன்று ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகத் தளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.
இருப்பினும்,
இது உண்மையில் ஒரு செய்தியாளர் கேட்ட கேள்விக்கு அவர் அளித்த பதிலின் ஒரு சிறு பகுதி மட்டுமே என்பதை நாங்கள் தெளிவுபடுத்த விரும்புகிறோம்.
உலகின் பல்வேறு பகுதிகளில் போர், நிலையற்ற தன்மை மற்றும் ஒடுக்குமுறைகளை எதிர்கொள்ளும் முஸ்லிம்களின் நிலைமையைக் குறிப்பிட்டு,
இந்தியாவின் முஸ்லிம்களின் நிலைமையுடன் ஒப்பிட்டு அந்த கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த ஜமாஅத் தலைவர், இந்தியாவின் அரசியலமைப்பு மற்றும் ஜனநாயக விழுமியங்கள் காரணமாக இங்கு நிலவும் அமைதி, பாதுகாப்பு மற்றும் வாய்ப்புகளுக்காக நாம் இறைவனுக்கு நன்றி கூறுகிறோம் என்று குறிப்பிட்டார்.
இருப்பினும்,
வைரலாகும் அந்த வீடியோ கிளிப், அவரது பதிலின் ஒரு பகுதியை மட்டுமே காட்டி, முழுமையான சூழலையும் அவர் முன்வைத்த தெளிவான நிலைப்பாட்டையும் தவிர்த்துவிட்டது.
இந்த ஜனநாயக மற்றும் அரசியலமைப்பு விழுமியங்கள் ஒரு அளவிலான அமைதியையும் பாதுகாப்பையும் உறுதி செய்துள்ள போதிலும்,
இந்த அருமையான விழுமியங்களைச் சீர்குலைக்கவும்,
நல்லிணக்கச் சூழலைக் கெடுக்கவும் நாட்டுக்குள் சில பாசிச சக்திகள் முயன்று வருகின்றன என்பதை ஜமாஅத் தலைவர் சையத் சஆதத்துல்லாஹ் ஹுசைனி மிகத் தெளிவாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஒரு குறுகிய பகுதியை மட்டும் தேர்ந்தெடுத்து எடிட் செய்து பரப்புவது, ஏதோ ஒட்டுமொத்த ஆதரவு வழங்கப்பட்டது போன்ற ஒரு தவறான பிம்பத்தை உருவாக்கியுள்ளது
இது முற்றிலும் உண்மையல்ல.
இந்திய அரசியலமைப்பு,
ஜனநாயக விழுமியங்கள் மற்றும் அனைத்து குடிமக்களின் உரிமைகள் மற்றும் கண்ணியத்திற்கு ஆதரவான தனது நிலைப்பாட்டை ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மீண்டும் உறுதிப்படுத்துகிறது.
அதே வேளையில், சமூக நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கவும், முஸ்லிம்கள் உள்ளிட்ட சமூகத்தின் பல்வேறு பிரிவினரை ஓரங்கட்டவும், பாசிச மற்றும் வகுப்புவாத சக்திகள் மேற்கொண்டு வரும் முயற்சிகள் குறித்தும், அநீதி இழைக்கப்படும் சம்பவங்கள் குறித்தும் ஜமாஅத் தொடர்ந்து கவலைகளை எழுப்பி வருகிறது.
அரைகுறையான அல்லது தவறாக வழிநடத்தும் உள்ளடக்கத்தைப் பரப்புவதைத் தவிர்க்குமாறு ஊடகத் தளங்களையும் தனிநபர்களையும் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கேட்டுக் கொள்கிறது.
மேலும்,
ஜனநாயக விழுமியங்களைப் பாதுகாக்கவும்,
நீதியை நிலைநாட்டவும்,
நாட்டின் அமைதி, சகவாழ்வு மற்றும் அரசியலமைப்பு ஆட்சித் தொடர்வதை உறுதிப்படுத்தவும் ஒன்றிணைந்து செயல்படுமாறு சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் அழைப்பு விடுக்கிறது.
வெளியீடு:
சல்மான் அஹ்மத்
தேசியச் செயலாளர்,
ஊடகத் துறை,
ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த்,
புது தில்லி.
https://www.facebook.com/share/p/1CLhuYXGGX/