அஸ்ஸலாமு அலைக்கும்
உப்பிலியபுரம் JIH. மகளிர் அணி சார்பாக, உப்பிலியபுரம் ஜாமிஆ பள்ளிவாசலில் நட்சத்திர மின்னல்களின் ஒளி விழா நிகழ்ச்சி 14/1/2025 மற்றும் 15/1/2025 என இரு தினங்கள் சிறப்பாக நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்.
இவ்விழாவில் உறுப்பினர், ஊழியர்கள், GIO பெண்கள் என அனைவரும் இணைந்து சிறப்பாக பணியாற்றினார்கள்.
14/1/2025 அன்று 4 வயது முதல் 12 வயது வரை உள்ள சிறுவர், சிறுமிகளுக்கு மார்க்க போட்டிகள் சிறப்பாக நடைபெற்றது.
இப்போட்டியில் 51 குழந்தைகள் 65 பெண்கள் என 115 பேர் பங்கு பெற்றனர்.
15/1/2025 அன்று பெண்கள், குழந்தைகள், ஆண்கள் என 350 பேர் கலந்து கொண்டனர்.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக ,
1. ஜனாப் - சையது முஹம்மது - திருச்சி மண்டல பொறுப்பாளர் -JIH
2. மௌலானா - சுஃப்யான் அஷ்ரஃபி
கலந்து கொண்டார்கள்.
நிகழ்ச்சியின் ஆரம்பமாக சகோதரி ஷபானா. ஓதினார்.
அதன் தர்ஜுமாவை சகோதரி நூரா மொழிபெயர்த்தார்.
நிகழ்ச்சியின் தொகுப்புரை சகோதரி ரூபினா வழங்கினார்.
மௌலானா - சுஃப்யான் அஷ்ரஃபி. அவர்கள் சொற்பொழிவாற்றினார்.
ஜனாப் - சையது முஹம்மது - திருச்சி மண்டல பொறுப்பாளர் - JIH அவர்கள் சிறப்பு சொற்பொழிவாற்றி னார்.
மறுமையில் மனிதனின் நிலை என்ற தலைப்பில் senior gio பெண்கள் செயல் முறை விளக்கம் நிகழ்த்தினர்.
*சுன்னாவின் ஒழுங்குகள் என்ற தலைப்பில் junior gio குழந்தைகள் செய்முறை விளக்கம் நிகழ்த்தினார்கள்.
பெண்களும் மார்க்க போட்டிகளில் கலந்து கொண்டார்கள்.
1. குழந்தை வளர்ப்பு - கட்டுரை போட்டி
2. சூரா அந்நூர் தர்ஜுமா - வினாடி வினா
3. அழிக்கப்பட்ட சமூகம் - பேச்சு போட்டி
போன்ற போட்டிகள் நடத்தப்பட்டது.
அனைவருக்கும் மதிய ஏற்பாடு செய்து வழங்கப்பட்டது.
விழாவின் இறுதியில் சிறப்பு பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்